Thursday, August 23, 2012

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’- ஆனால் பணம் என்ற செல்வத்தின் மீது நாட்டம் கொண்டு வளைகுடா நாடுகளுக்கு பறக்கும் இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு என்ன நிகழ்கிறது?

பணத்தை சம்பாதித்துவிட்டு தாயகம் திரும்பும் வேளையில் ஆரோக்கியம் என்ற செல்வம் சீரழிந்து போயிருக்கும். கை நிறைய பணமும்,உடல் நிறைய நோய்களையும் சுமந்துகொண்டு வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர். வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்களைப் பொறுத்தவரை கடுமையான ஆரோக்கிய பிரச்சனைகள் தான் மிஞ்சும்

அவர்களின் ஆரோக்கிய இழப்பின் காரணங்களாக பின்வருவன சுட்டிக்காட்டப்படுகின்றன:

1.மோசமான பணி சூழல்

2.மோசமான வாழ்க்கை சூழல்

3.சம்பளம் உரிய நேரத்தில் கிடைக்காமை

4.பணி ஒப்பந்தங்களில் பிறழ்வு

5.பாஸ்போர்ட், விசா, அடையாள அட்டை ஆகியவற்றின் காலாவதி முடியும் வேளையில் சந்திக்கும் பிரச்சனைகள்

6.ஏஜண்டுகளின் ஏமாற்று வேலைகள்

7.குடும்பத்தினரின் பிரிவு

8.கடன் உள்ளிட்ட பொருளாதார ரீதியான பிரச்சனைகள்

9.உணவும், உறக்கமும் முறை/நேரம் தவறும்

10.உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை

11.ஓய்வில்லாத பணி!

12.ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!

13.கடுமையான வெப்பம்

14.பெனடாலும் தைலங்களும் உற்றத்தோழர்கள் ஆகியனவாகும்.

சுருக்கமாக கூறினால் வளைகுடாவசிகளின் மனதில் சிறகு முளைத்த கனவுகள் ஒவ்வொன்றாக கருகிப் போகின்றன.

பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.

முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.

கடுமையான வெப்பம்

வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.

கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.


ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.


தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.

இக்கட்டுரையின் துவக்கத்தில்/தலைப்பில் கூறியபடிநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம். போதும் வாலிபமே கரைந்துக்கொண்டிருக்கும் வேளையில் நாம் ஏன் இங்கே இவர்களின் பிடியில் நம் திறமையையும், உடல் ஆரோகியத்தையும் இழப்பது போதும் நம் முன்னோர்களின் செய்த இந்த செயல் நமக்கெதுக்கு நம் இந்தியாவில் நிரைய காலியிடங்கள் நிரம்பி வழிய வளைகுடா மற்றும் இதர அயல்நாடு தேவைதான இளைங்ஞர்களே சிந்திப்பீர்
 
என்ன கொடுமை?உறவுகளின் தூரம் அதிகமாகப் போய் விட்டதால் தொலைபேசியிலேயே பாதி வாழ்க்கையாகவும் பாதி சம்பளமுமாகவும் போய் கொண்டு இருக்கிறதுஎங்களுக்கு. சாபமா வரமா தெரியாது. கேள்விகளும் ஆச்சரியங்களும் என்றும் முற்று பெறாது தொடரும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கும் என் அன்புச் சகோதரிகளே...!! தாய்மார்களே....! இதைப் படித்து விட்டு நீங்கள் கண்ணீர் விடுவதை விட...

உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டால்... அந்தச் சகோதரர்களுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்!

நம் முஸ்லிம் சமுதாய நெஞ்சங்களே நம் இந்தியாவில் காலி பணியுடங்கள் நிறைய இருக்கின்றன அதில் சில

சார்-பதிவாளர், நகராட்சி ஆணையாளர் உள்பட குரூப் 2 பிரிவின் கீழுள்ள 3 ஆயிரத்து 631 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) செயலாளர் த.உதயசந்திரன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சார் பதிவாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர், வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன. அந்தப் பிரிவில் 3 ஆயிரத்து 631 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்படுகிறது.

அதன்படி, தேர்வாணையத்தின் இணையதளம் வழியாக (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி ஜூலை 13 ஆகும்.

வங்கி மற்றும் அஞ்சலகங்களில் விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 17.

தேர்வு ஆகஸ்ட் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.

குரூப் 2 தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்று இருப்பது அவசியம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50. தேர்வுக் கட்டணம் ரூ.100.

பொது அறிவுடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வினை நடத்துவதற்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சேர்த்து 114 மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நிரந்தரப் பதிவு:

தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நிரந்தரப் பதிவு மற்றும் குரூப் 4 தேர்வுக்கு வழங்கப்பட்ட நிரந்தரப் பதிவெண் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவெண் மற்றும் கடவுச்சொல் இல்லாதவர்கள் நேரடியாக தேவைப்படும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். அவர்களின் விவரங்கள் நிரந்தரப் பதிவுக்கு மாற்றம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்:


தேர்வுக்கு இணையதளம் வழியே வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கும் பட்சத்தில் இணையதளத்தில் எளிதாகப் பதிவு செய்வதோடு, தேர்வுக் கட்டணத்தை செலுத்துவதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் தவிர்க்கலாம் என தேர்வாணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாவிற்காக காத்திருந்தது போதும் விழித்தெழு இஸ்லாமிய இளைய சமூகமே !

Wednesday, August 1, 2012

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்..."ஐ.ஜே.எஸ்"-ம் வருகிறதாம்...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்...இந்த வரிசையில் இப்போது வருகிறது ஐ.ஜே.எஸ். அதென்ன ஐ.ஜே.எஸ்?



ஆட்சி அதிகாரத்தில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். காவல்துறையில் உயர்நிலைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஐ.பி.எஸ். அதிகாரிகள். இதேபோல வெளியுறவுத் துறைப் பணிகளுக்கு ஐஎப்எஸ், வருவாய்த் துறைக்கு ஐஆர்எஸ் என உள்ளது. இந்த வரிசையில் நீதித்துறையில் உயர்நிலைப் பொறுப்பாக ஐ.ஜே. எஸ். அதாவது இண்டியன் ஜூடிசியல் சர்வீஸ் என்பதை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.



இது தொடர்பான வரைவை சட்ட அமைச்சகம் தயாரித்திருக்கிறது. இன்னும் ஓரிருநாளில் கூட இருக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டுவிடும் என்று கூறப்படுகிறது.


ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளுக்குப் போலவே அனைத்திந்திய அளவில் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். இதில் தேர்ந்தெடுக்கபப்டுவோர் மாவட்ட நீதிபதிகளாகவும் மேல்நீதிமன்றத்தில் உரிய பொறுப்புகளுக்கும் நியமிக்கப்படுவர். இத்தகைய நடவடிக்கை மூலம் உயர்நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றங்களிலும் இளம்வயது திறமையான நீதிபதிகள் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தற்போதைய நடைமுறையில் மாஜிஸ்திரேட்டுகளாக பணியாற்றி பின்னர் ஒரு 10 ஆண்டுகாலம் கழித்துதான் மாவட்ட நீதிபதியாக பணியாற்ற முடியும். இந்த நிலைமையை தற்போதைய ஐ.ஜே.எஸ் முறை மாற்றும்.



இந்த ஐ.ஜே.எஸ். முறை தொடர்பாக மாநில அரசுகளுடனும் உயர்ந் நீதிமன்றங்களுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. 17 நீதிமன்றங்களில் 11 நீதிமன்றங்களும் 20 மாநிலங்களில் 7 மாநிலங்களும் இதற்கு ஓகே சொன்னது.


உச்சநீதிமன்றமும் கூட தேங்கிக் கிடக்கும் வழக்குகளை மனதில் வைத்துக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஜே.எஸ். முறையை அமல்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்திருந்தது. மேலும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துவிட்டால் இதனை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசுக்கு சிக்கல் இருக்காது.



ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ். தேர்வு போல ஐஜேஎஸ் தேர்வும் எப்படி வரவேற்பைப் பெறுகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்!

Wednesday, July 25, 2012

கியாரண்ட்டி என்றால் என்ன? , வாரண்ட்டி என்றால் என்ன?


 

கியாரண்ட்டிஎன்றால் உத்திரவாதம்என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. வாரண்ட்டிஎன்பதும் கிட்ட த்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார் வையில் கியாரண்டிஎன்றால் பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் சர்வீஸைக் குறிப்பது.

அதா வது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரி யாக வேலை செய்யாவிட்டால், மாற் றிக் கொடுப்பார்கள். ஆனால் தற்போது, பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான் செய்து கொடுக்கிறார்கள்.





சமீபத்தில் லாப்_டாப்தொடர்பான ஒரு வழக்கு நடந்தது. ஒரு சயன்டிஸ்ட்தன்னுடைய புதிய கண்டுபிடிப்பை, ஒரு செமினா ரில், ‘லாப்டாப்மூலமாக விளக்கிக் கொண்டிருக்கும்போது, மானிட்டர் வெறுமையாகிவிட்டது.

மேற்கொண்டு எப்படி தொடர்வது என்று தெரியாமல், தவித்து, எப்படியோ சமாளித்திருக்கி றார். உடனே, ‘லாப்_டாப் வாங் கிய நிறுவனத்தைக் கேட்ட தில்அவர்கள் கூலாக, ‘நீங்கள் லாப்_டாப்பைசரியாக பிளக் கில்செருக வில்லை. அத னால் அது எங்கள் தவறு இல் லை. இதற்கு நாங்கள் ஒன்றும் செய்யமுடியாதுஎன்று தட்டிக்கழித்து விட்டார்கள்.

மேலும் வற்புறுத்தி, ‘கியார ண்ட்டிகொடுத்திருப்பதால், மாற்றிக் கொடுக்க வேண்டும் என்ற வுடன், நாங்கள் கியாரண்ட்டி கொடுக்க வில்லை.
வாரண்ட்டி என்றுதான் கார்டுகொடுத்திருக்கிறோம். அதனால் மாற்றிக் கொடுக்க முடியாது. வேண்டுமானால் ரிப்பேர் செய்து கொடுக்கிறோம்என்றார்கள் ஆனால் ரிப்பேர் செய்ய முடியாமல், ‘லாப்டாப்உபயோகமில்லாமல் போய்விட்டது. கியாரண்ட்டி வாரண்ட்டியைவைத்துக் கொண்டு எப்படி விளையாடி விட்டார்கள் பாருங்கள்! 

Friday, July 20, 2012

அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்கு தெரியவில்லையா?


)
அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும்சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்கு தெரியவில்லையா? அப்ப படியுங்கள் இதை
ஒரு பெரிய பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்நீங்கள் என்னிடம் பாம்பை பிடித்து தந்தால் ஒரு பாம்புக்கு 10ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாயைவாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததுஅதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.

உடனே அந்த பணக்காரர் அறிவித்தார் இப்போதும் பாம்பைபிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார்கள். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் . ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல் எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்பதேமிக அறியதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.


அந்த பணக்காரர் விடவில்லை மீண்டும் அறிவித்தார் இப்போது 50 ரூபாய் தருவதாக .உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பை காண்பதே அறிதாகிவிட்டது.அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை மேலும் பாம்பு கிடைப்பது அறிதாகிவிட்டதால்100 ரூபாய தருவதாக அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தான்அவசர அவசரமாக இன்னொரு பிஸினஸ் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன் அதனால் உங்களாள் முடிந்த அளவுபிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி நான் வரும்வரைக்கு என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லிஎன்றுவிட்டார்.


அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டுமக்களே இங்கே பாருங்கள் அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும்அத்ற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இருக்காது. அதனால்நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்கலை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிரது என்றுஅவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன்.
அவர்வந்ததும் இதே பாம்பை நீங்கள் அவரிடம் 100 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள் என்று சொன்னார். உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிகுவித்தார்கள்.


எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போகிறேன் என்று சொல்லிபொய்விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்பு மட்டும்தான்.

 மக்காஸ் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்டாக்மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்று. இப்படிதான் மக்கா பலதொழில் அதிபர்கள் பாம்புக்கு பதிலாக புது புது பொருட்களையும் திட்ட்ங்களை கூறியும் மக்களை ஸ்டாக் மார்க்கெட்டில் ஏமாற்றிவருகிறார்கள்.

இப்ப சொல்லுங்க நீங்க ஏமாந்தவர்களில் ஒருவரா அல்லது இதை படித்தும் வருங்காலத்தில் ஏமாறக்கூடிய ஆட்களில் ஒருவரா?