Friday, July 20, 2012

அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்கு தெரியவில்லையா?


)
அதிக பணம் சம்பாதிக்க மிக எளிய வழி (குப்பனுக்கும்சுப்பனுக்கும் தெரிந்த ஸ்டாக் மார்க்கெட் பற்றி உங்களுக்கு தெரியவில்லையா? அப்ப படியுங்கள் இதை
ஒரு பெரிய பணக்காரன் ஒரு கிராமத்திற்கு வந்து சொன்னான்நீங்கள் என்னிடம் பாம்பை பிடித்து தந்தால் ஒரு பாம்புக்கு 10ரூபாய் தருகிறேன் என்றான். உடனே கிராம மக்கள் ஊரில் உள்ள பாம்புக்களை எல்லாம் பிடித்து கொடுத்து 10 ரூபாயைவாங்கி கொண்டார்கள். ஊரில் உள்ள எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததுஅதில் இருந்த ஆர்வம் குறைந்து போய்விட்டது.

உடனே அந்த பணக்காரர் அறிவித்தார் இப்போதும் பாம்பைபிடித்து கொடுப்பவர்களுக்கு 25 ரூபாய் தருவதாக சொன்னார்கள். அவர்கள் மீண்டும் உற்சாகமாகி தேடி தேடிபாம்பை பிடித்து கொடுத்தார்கள் . ஊரில் ஒன்று கூட மிச்சம்வைக்காமல் எல்லாப் பாம்புகளையும் பிடித்துவிட்டதால் அதன் எண்ணிக்கை மிக மிக மிக குறைய ஆரம்பித்து பாம்பை பார்பதேமிக அறியதாகி விட்டதால் அதில் இருந்த ஆர்வம் குறைந்துபோய்விட்டது.


அந்த பணக்காரர் விடவில்லை மீண்டும் அறிவித்தார் இப்போது 50 ரூபாய் தருவதாக .உடனே ஊரில் உள்ள மக்கள் அருகில் இருந்த காடு மலை சென்று ஒன்று விடாமல் பிடித்துகொடுத்தார்கள். இப்போது பாம்பை காண்பதே அறிதாகிவிட்டது.அவர் இப்போதும் விடவில்லை.எனக்கு இன்னும் அதிகபாம்புகள் தேவை மேலும் பாம்பு கிடைப்பது அறிதாகிவிட்டதால்100 ரூபாய தருவதாக அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் தான்அவசர அவசரமாக இன்னொரு பிஸினஸ் விஷயமாகமற்றொரு ஊர் செல்ல வேண்டுமென்பதால் ஒரு வாரத்தில் வந்து வாங்கி கொள்கிறேன் அதனால் உங்களாள் முடிந்த அளவுபிடித்து கொண்டுவாருங்கள் என்று சொல்லி நான் வரும்வரைக்கு என் உதவியாளர் இங்கு இருப்பார் என்று சொல்லிஎன்றுவிட்டார்.


அடுத்த நாள் அந்த உதவியாளர் ஊர் மக்களை கூப்பிட்டுமக்களே இங்கே பாருங்கள் அனைத்து பாம்புகளும் இந்த கூண்டில் உள்ளது. நிச்சயமாக சொல்லுகிறேன் இந்த ஊரிலும்அத்ற்கு அருகில் எங்கேயும் பாம்புகளே இருக்காது. அதனால்நான் ஒரு ஐடியா வைத்து இருக்கிறேன்.
இந்த பாம்புக்கலை எல்லாம் நான் உங்களுக்கு 75 ரூபாய்க்கு விற்கிறேன். அதன்பின் முதலாளி வருவதற்கு முதல் நாள் நான் அவசர அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருக்கிரது என்றுஅவருக்கு போன் மூலம் சொல்லி சென்று விடுகிறேன்.
அவர்வந்ததும் இதே பாம்பை நீங்கள் அவரிடம் 100 ரூபாய்க்கு விற்றுவிடுங்கள் என்று சொன்னார். உடனே மக்கள் தங்கள் சேமிப்பில் இருந்த பணத்தையும் இருந்த நகைகளையும் விற்று அந்தபணத்தில் பாம்பை போட்டி போட்டுக் கொண்டு வாங்கிகுவித்தார்கள்.


எல்லாப் பாம்பையும் விற்ற அந்த உதவியாளர் முதலாளி நாளைவருகிறார் அதனால் நான் இன்று போகிறேன் என்று சொல்லிபொய்விட்டார். அந்த நாளில் இருந்து இந்த நாள் வரை அந்த ஊர் மக்கள் அந்த முதலாளியையும் பார்க்கவில்லை அந்த உதவியாளனையும் பார்க்கவில்லை....இப்போது அவர்களிடம் இருப்பது அந்த பாம்பு மட்டும்தான்.

 மக்காஸ் இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் ஸ்டாக்மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்று. இப்படிதான் மக்கா பலதொழில் அதிபர்கள் பாம்புக்கு பதிலாக புது புது பொருட்களையும் திட்ட்ங்களை கூறியும் மக்களை ஸ்டாக் மார்க்கெட்டில் ஏமாற்றிவருகிறார்கள்.

இப்ப சொல்லுங்க நீங்க ஏமாந்தவர்களில் ஒருவரா அல்லது இதை படித்தும் வருங்காலத்தில் ஏமாறக்கூடிய ஆட்களில் ஒருவரா? 

1 comment:

  1. பணம் சம்பாதிக்க யாராலும் முடியாமல் இல்லை. ஆனால் பலருக்கும் அதற்கான வழிகள் தெரியவில்லை என்பது தான் உண்மை. பணத்தைப் பற்றிய கல்வி நமக்கு இல்லாததாலும், பணத்தைப் பொறுத்த நம் கண்ணோட்டம் தவறாக இருப்பதாலும் தான் பணம் என்பது இன்று நமக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. நம் முன்னோர்கள் அல்லது நமது குடும்பத்தில் உள்ளவர்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை வைத்தே நாம் பணம் சம்பாதிப்பதைப்பற்றி யோசிக்கிறோம். ஆனால் காலம் காலமாக வேலை செய்வதற்கு சொல்லிக்கொடுத்த அளவிற்கு யாரும் நமக்கோ அல்லது நமது முன்னோர்களுக்கோ பணம் சம்பாதிப்பதைப்பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. இன்று நம்மில் பலர் வறுமையில் இருப்பதற்குக் காரணம் பணம் பற்றிய அறிவு இல்லாததே ஆகும். பணக்காரர்கள் தங்கள் வாரிசுகளுக்கு மட்டுமே கற்றுத் தரக்கூடிய பணம் சேர்க்கும் வித்தைகளை ஒருசிலர் மட்டுமே உலகத்திற்கு எடுத்துக்கூறி உள்ளனர். அந்த இரகசியங்களை எங்கு, எப்படிப் பெறுவது என்பதை அறிய விரும்பினால் secretsinmoneymaking@yahoo.com என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பவும்.

    ReplyDelete