Thursday, February 23, 2012

குவைத் தேசிய தின கொண்டாட்டம்

1961 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு பிப்ரவரி  25 குவைத் தேசிய தினமாகம், 26  சுதந்திர தினமாகம்    கொண்டாடபடுகிறது, இந்த வருடம் 51 தேசிய தினமா  ஆகும்,  நகரின் முக்கிய பல கட்டிடங்கள் வண்ன

மின் விளக்குகளால் அலங்கரிகப்படுள்ளது.


குறிப்பாக அஹமதி  என்கின்ற பகுதியில் குவைத் எண்ணெய் நிறுவனத்திற்கு (KOC)  சொந்தமான குடியிருப்பு பகுதியில் சாலையின் இரு புறமும் உள்ள  மரம், செடி  ஆகியவைய்   விளக்குகளால் ஒளிரும்.



கடந்த வருடம் (2011)  குவைத்தின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு குவைத் குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளம் போனஸாக வழங்கப்பட வேண்டும் என்று அந்நாட்டின் எம்.பி. ஒருவர் வேண்டுகோள் விடுத்தார்.


குவைத் தனது 50வது தேசிய தினத்தையும், ஈராக்கின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலையான 20வது சுதந்திர தினத்தையும், தற்போதைய அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபாஹ் பதவியேற்ற 5வது ஆண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடும் வகையில் 11 இலட்சம் குவைத் குடிமக்களுக்கு 1,000 குவைத் தினார் (சுமார் 1.60 இலட்சம் ரூபாய்) வழங்கப்படும் என்றும் வீட்டிற்கு தேவையான அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் 14 மாதங்களுக்கு இலவசமாகவும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ( நம்ம  ஊர்  முதல் அமைச்சர்களுக்கு போட்டியாக )        

மேலும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நோக்குடன் உலகிலேயே மிக நீளமான தேசியக்கொடியும் வடிவமைக்கப்பட்டது.

 
இதன் ஒரு பகுதியாக, தனியார் நிறுவனங்கள் குவைத்தில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கும் ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும் என்று வலீத் அல்-தபதபயீ என்ற எம்.பி. அந்நாட்டின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ’குவைத்தின் தொழிலதிபர்களும், நிறுவன உரிமையாளர்களும் அன்பிலும் பொருளுதவி செய்வதிலும் பெயர் போனவர்கள்; அவர்கள் தமது சமூகக் கடமையாகக் கருதி தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவருக்கு ஒரு மாத சம்பளத்தை போனஸாக வழங்க வேண்டும்; இதன் மூலம் வெளிநாட்டினரையும் குவைத்தின் தேசிய தின மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களில் அங்கம் வகிக்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுமார் 6 இலட்சம் இந்தியர்கள் குவைத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 


இது அவர்களுக்கு  வழங்கப்படவில்லை   என்பது குறிப்பிடத்தக்கது



 இந்த   தினத்தில் குவைத்தி குடும்பதினர் தேசிய உடையை அணிந்து          கைகளில் தேசிய கொடிகளுடன்    நகரின் முக்கிய  பகுதிகளான சால்மியா கடற்கரை , மெஸ்சில கடற்கரை  பகுதியில் தங்களது  மகிழ்ச்சியை வெளிபடுத்த   நுரை டின்களை  ( foam )   கொண்டு  ஒருவர்மிது ஓருவர்  அடித்து
கொண்டு  விளையாடுவர்கள்.

சிலர் வாகனங்களின்  முன் புற கண்ணாடியில் உள்ள    வைபர்  இயங்காமுடியாமல் முழுவதும்   நுரை டின்களை   கொண்டு அடிப்பார்கள்.    


ஆனால் இந்த வருடம் (2012 )  அரசாங்கம்   நுரை டின்களை   உபயோகிக்க தடை செய்துள்ளது.

  

சால்மியா கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் நேரம்  வானத்தில் வானவேடிக்கை  நடைபெரும். 

 குவைத்தில்  பிப்ரவரி மாதம்  , இயற்கை சூழலில் அதன் மிதமான காலநிலையால்  Hala பிப்ரவரி விழா குவைத் சிட்டியியல்  ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர பண்டிகை ஆகும். இது குவைத்திர்   ஒரு தனித்துவமான மாதம் என்பதால், மாதம்முழுவதும்    திருவிழாக்கள்   ஏற்பாடு செய்யப்படும்.  


இந்த தினத்தில் குவைத்திள் பல ஷாப்பிங் சென்டர்களில் ஹாலா பிப்ராயர் என்று, (நம்ம ஊர் ஆடி தள்ளுபடி) சிறப்பு சலுகையில் பொருள்கள் கிடைக்கும்.








சிறப்பு நிகழ்வுகள் ஒரு பல்வேறு கலாசார  விழாகள்  ஏற்பாடு செய்யப்படும். விழா பங்கேற்பாளர்கள் தங்களது நேரத்தை ஷாப்பிங், இசை- நிகல்ட்சிகள், மாலை கவிதை வாசிப்புக்கள், கலாச்சார கருத்தரங்குகள் மற்றும் தினசரி raffles சிறப்பு பரிசுகள் பெற பல வாய்ப்புகள் உள்ளன. கூடுதலாக, உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுப்போட்டிகள்  குவைத் விளையாட்டு கிளப் மூலம் நடத்தப்படும்.

 


No comments:

Post a Comment